27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 07 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள ஒருவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 611 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 198 கிராம் 737 மில்லி கிராம் ஹெரோயின், 228 கிராம் 26 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 2,538 கிராம் 657 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

கிளிநொச்சி கண்ணகைபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு

User1

இறந்த உயிரே இறுதியாகட்டும்-யாழ் கோர விபத்து-போராட்டத்தில் குதித்த மக்கள்..!

sumi

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பகுதியில்தேர் திருவிழா

User1

Leave a Comment