27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தன் விமானத்தில் செல்லும் போது பலி!!

சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த வேளை திடீரென உடல்நல குறைப்பாடு ஏற்பட்டது.

அது தொடர்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது ,

விமானம் தரையிறங்கியதும் தயராக இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக குரோம்பேட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

1300 வைத்தியர்கள் மார்ச்சில் நியமனம்

sumi

தனிநபர் வருமான வரியை குறைக்க தீர்மானம் !

User1

வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை , , தமிழ் மக்களின் ஒற்றுமையை இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் !

User1

Leave a Comment