27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

டெங்கு நோயினால் மற்றுமொரு பல்கலைகழக மாணவியும் பலி..!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளார்.

புதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த யுவதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பல்கலைக்கழக மாணவி நேற்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தெற்கு அதிவேக வீதியில் லொறி கவிழ்ந்து விபத்து 

User1

காதலர் தினத்தில் காதலியுடன் வாக்குவாதம்-காதலன் விபரீத முடிவு-இலங்கையில் சோகம்..! மு

sumi

அரச உத்தியோகத்தர்களின் வாக்குகளால் முன்னிலையில் ரணில்

User1

Leave a Comment