27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedமன்னார் செய்திகள்

திருகேதீஸ்வரத்தில்  சிவராத்திரி முன்னாயத்தக் கூட்டம்!

மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தில், இந்தவருட மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்  நேற்று(31) மாலை மன்னார்  மாவட்டச் செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் திருகேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபைத் தலைவர், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) , மன்னார் நகரப் பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எதிர் வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழா மற்றும் அன்றையதினம் ஆலயத்துக்கு வருகை தர உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான பல்வேறு விடயங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன்  முக்கிய முடிவுகளும் எட்டப்பட்டன.

விசேட பேருந்து சேவை, உணவு குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுத்தல், மருத்துவ வசதிகளை வழங்குதல், ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Related posts

டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு !

User1

அநுரவின் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய கண்காணிப்பாளர்ள்.

User1

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! வழங்கப்பட்டுள்ள அனுமதி

User1

Leave a Comment