27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

கஞ்சாச் செய்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை

கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது கஞ்சா பயிரிடலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு,

“ இல்லை, அவ்வாறானதொரு பத்திரம் அமைச்சரவைக்கு வரவில்லை.” – என்று அமைச்சர் பதிலளித்தார்.

அதேவேளை, ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடலுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பாக இடம் பெற்ற மடு அன்னையின் ஆவணித் திருவிழா

User1

தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித்திற்கு ஆதரவு !

User1

பருத்தித்துறையில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் பலி!!

User1