27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

இந்திய இலங்கை உறவுக்கு சீனா தடையல்ல.!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது நாட்டிற்கு வழங்கிய பொருளாதார ஆதரவுக்காகவும் அவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு வழங்கியது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பேர்த் நகரில் நடைபெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இதன்போது வியோன் (WION) செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே‍யே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Related posts

காணி உரிமையையும், வீட்டுரிமையையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன் : ஜனாதிபதி !

User1

வடமராட்சி மண்ணில் பா.அரியநேத்திரன்!

User1

பட்டமளிப்புக்குச் சென்றோர் விபத்தில் காயம்

sumi