27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஉலக செய்திகள்

மியன்மாரில் இராணுவசேவை கட்டாயம்.!

மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கு இராணுவ சேவையை கட்டாயமாக்குவதாக அந்நாட்டு இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.

18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட பெண்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் கடமையாற்ற வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் மியன்மார் இராணுவம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

போராளிகள் அமைப்பு மற்றும் இராணுவ விரோத போாளிகளுடன் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற மோதல்களில் மியன்மார் இராணுவம் மிக மோசமான தோல்வியை எதிர்நோக்கியது.

இதன் காரணமாக இராணுவத்தை பலப்படுத்தும் நோக்கில், மியன்மார் இராணுவ அரசாங்கம், சகல இளைஞர்,யுவதிகளுக்கு இராணுவ சேவையை கட்டாயமாக்கியுள்ளது.

மியன்மார் இராணுவம் கடந்த 2021 ஆம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் அந்நாட்டின் ஜனநாயக அரசாங்கத்தை வீழ்ச்சி ஆட்சியை கைப்பற்றியது.

அந்நாட்டின் ஜனநாயக தலைவியான Aung San Suu Kyi உட்பட ஜனநாயக தலைவர்களை வீட்டுக்காவலிலும் சிறைகளிலும் அடைத்துள்ளது.

Related posts

மதுபான நிலையங்களை கட்டுப்படுத்த வேட்பாளர்களிடம் பேசப்பட்டதா?

User1

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவல் !

User1

மீன்பிடி படகு கப்பலுடன் மோதி விபத்து- மூவரை காணவில்லை !

User1