28 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

சிறுநீர் கழித்த பொலிஸ் மீது பொலிஸார் தாக்குதல்.!

மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகரை கடுமையாக தாக்கியதாக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் அடியிலேயே சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். சுமார் 6 பேர் கொண்ட பொலிஸ் குழு தம்மைச் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்களில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸ் பரிசோதகரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட அதிகாரி தம்மைக் கடுமையாக குற்றம் சாட்டியதாகவும் பொலிஸ் பரிசோதகர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கடந்த 9ம் திகதி இரவு பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து சிறுநீர் கழிப்பதற்காக மரத்தடிக்கு சென்றதாக அவர் கொடுத்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது

Related posts

தமிழரசின் தலைவர் சிறீதரனுக்கு சுமந்திரன் எம்.பி கடிதம்

sumi

நாட்டின் நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு: ரணில் பகிரங்கம்

User1

மாற்றுத்திறனாளிகள் தற்காலிக அடையாள அட்டையை தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தலாம் !

User1