27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

யாழில் இளைஞர் ஒருவர் இருபது கிலோ கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ். வளைவுக்கு அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிரடிப்படையினர் மேற்படி இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வவுனியாவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி

sumi

இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: 36 வயது பெண் கொடூர கொலை !

User1

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ் வணிகர் கழகத்தில் சந்திப்பு !

User1

Leave a Comment