28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தம்பலகாமம் பிரதேச செயலக 2ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று (06)தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் பிரதேச செயலக பகுதியில் உள்ள வெளிக்கள அலுவலர்களின் வேலைத்திட்டங்கள் மற்றும் உள்ளக கணக்காய்வு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசப்பட்டன.

இதன் போது மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றி வந்த ஏ.எல் மஹ்ரூப் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வதை அடுத்து பிரதேச செயலாளர் தலைமையில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குறித்த நிகழ்வில் கணக்காய்வு அத்தியட்சகர் எஸ். எம். எம். மர்சூக் உட்பட பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

புதினம் தெரியுமோ? டெங்குக் காய்ச்சலை மாத்தவெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனால்..

sumi

யாழில் காணி சுவீகரிப்பு-முறியடித்த மக்கள்..!

sumi

சிறுவர் விருத்திமைய கலை விழா!

sumi

Leave a Comment