27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியை அவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக சந்தித்தனர்.

கடந்த 4ம் திகதி திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். சீ. சபறுள்ளா தெரிவித்தார்.

திருகோணமலை நீமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (06)காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் இம்மாதம் ஆகஸ்ட் 5ம் திகதிய தேசிய பத்திரிகை ஒன்றில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும் இந்த செய்தியை வெளியிட்ட அதே நிறுவனம் எங்களது மறுப்பறிக்கையினை அதே முன் பக்கத்தில் வெளியிட வேண்டும்.

தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காக சில சட்டத்தரணிகள் 04.08.2024 அன்று ஜனாதிபதியை சந்தித்தனர். நடக்காதது நடந்தது என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதியினால் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எந்தவித அழைப்பும் கிடைக்கவில்லை.

இது மக்களை பிழையாக வழிநடாத்துகின்ற செய்தியாகும் இது தவிர வேறு ஒளி ஒலி ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டுள்ளது எனவே இதனை கைவாங்கி மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

சட்டரீதியான நடவடிக்கைக்காக கோரிக்கை கடிதம் அனுப்ப தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

Related posts

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு !

User1

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 7 .70 கிலோ தங்கம் பறிமுதல்!

sumi

நெல்லியடி  மெ/மி/த/க/பாடசாலைக்கு  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

User1

Leave a Comment