27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

யுக்திய நடவடிக்கையின் போது 677 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 677 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 668 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 09 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 40 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 251 கிராம் 452 மில்லி கிராம் ஹெரோயின், 199 கிராம் 665 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 838 கிராம் 462 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 182 கஞ்சா செடிகள் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!

User1

போலிப் புத்தருக்கு பிணை

sumi

வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

User1

Leave a Comment