29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorized

நாமல் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவார் – மகிந்த நம்பிக்கை !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய போதே அவரை இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசத்தின் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு இளம் தலைவர் தேவை என்றும், ‘அரகலய’ செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து தான் இளம் தலைவர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு வெளியேறிய சில உறுப்பினர்கள் மீண்டும் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பார்கள் எனவும், அவர்களை கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

போலியான அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள் குறித்து எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

User1

புதிய விண்ணப்பங்கள் கோரல்.!

sumi

முச்சக்கரவண்டியில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு !

User1

Leave a Comment