27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பாரதி விளையாட்டுக்கழகம் நடாத்திய மரதன் ஓட்ட நிகழ்வு

உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின்  80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும்  முகமாக நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டியானது   11/08/2024 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் காலை 06.00 ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி புதுக்காடு சந்தியில் இருந்து பாரதி விளையாட்டு மைதானம் நோக்கியும்,பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு தாளையடியில் இருந்து பாரதி விளையாட்டு மைதானம் நோக்கியும் ஆரம்பமானது.

 மரதன் ஓட்டப் போட்டியில் வடமாகாணத்தின் பல்வேறு இடங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தை கிளிநொச்சியை சேர்ந்த கலையரசனும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பலாலியை சேர்ந்த அபிஷாவும் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்

வெற்றியாளர்களுக்கும்,போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசில்கள்,வெற்றிக்கேடயம் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Related posts

யாழில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழப்பு

User1

ஆனையிறவு பகுதியில் சற்றுமுன் கோர விபத்து : ஒருவர் பலி

User1

ஜனநாயக பங்குதார்களுக்கான ஓர் இடத்தை அமைத்தல் கலந்துரையாடல்

User1

Leave a Comment