29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

பதினாறு வயது சிறுவன் கடத்தல் ; ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது!

பதினாறு வயது சிறுவனை காரில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் இருவரில் ஒருவர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் மற்றையவர் மீகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றைய இருவரும் பரகடுவ மென்னாரபிட்டிய மற்றும் பட்பேரிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29 மற்றும் 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிபிட்டிய பல்லேகம பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரை காரில் கடத்திச் செல்வதாக எம்பிலிபிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், எம்பிலிபிட்டிய நோனாகம பகுதியில் உள்ள வங்கி ஒன்றிற்கு முன்பதாக வைத்து இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்த காரினுள் கடத்தப்பட்ட சிறுவனும் நான்கு சந்தேக நபர்களும் இருந்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பதுளையில் துப்பாக்கிசூடு : கர்ப்பவதி படுகாயம்

User1

பேஸ்புக் மூலம் சட்டவிரோத பார்ட்டி… 10 இளம் பெண்களும் 33 இளைஞர்களும் கைது.

User1

இந்தியமீனவர்கள் 6 பேர் விடுவிப்பு

sumi

Leave a Comment