29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து இருவர் படுகாயம்டைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (12.08.2024) மாலை வேளை இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த இரு மோட்டார் வண்டிகளும், ஒன்றுடன் ஒன்று பின்பக்கமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக கருவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு தினம்!

User1

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்-மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!

sumi

கிளிநொச்சியில் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது

sumi

Leave a Comment