27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006/08/14 அன்று  விமானத்தாக்குதலில்  கொல்லப்பட்ட  54 மாணவச் செல்வங்களின் 18ம்  ஆண்டு  நினைவுநாள் இன்று நினைவு கூறபபட்டுள்ளது.

செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில்.  தாய்த்தமிழ் பேரவையினரில்  ஏற்ப்பாட்டில் காலை 9:00  மணியளவில்  நிகழ்வுகள்  ஆரம்பமாகியது,  இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட  2 பிள்ளைகளின் தந்தையார்  ஏற்றிவைத்தார்.

அதனைத்  தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட  பெற்றோர் பிள்ளைகளின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில்  அரசியல்வாதிகள்,  சமூக செயற்பாட்டாளர்கள். தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கெருடாவில் மைக்கல் நேசக்கரம் ஊடாக இரு குடும்பங்களுக்கு உதவி.!

sumi

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் திட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

User1

ஜேர்மன் தூதுவரை  சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!!

sumi

Leave a Comment