27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

ரணிலுக்கு ஆதரவாக “புலுவன் ஸ்ரீலங்கா” ஒப்பந்தம் கைச்சாத்து

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் “புலுவன் ஸ்ரீலங்கா” உடன்படிக்கையில் 34 கட்சிகளும் கூட்டணிகளும் கைச்சாத்திட்டுள்ளன.

பத்தரமுல்லையில் இன்று (16.08.2024) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளார்.

செப்டம்பர் 21, காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட 39 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாரிய நிதிமோசடி இன்னும் தீர்வில்லை: சாணக்கியன் கருத்து தெரிவிப்பு !

User1

கண்டி நகரை சுற்றுலா நகராக மாற்ற திட்டம் ; ஜனாதிபதி

User1

தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்

User1

Leave a Comment