27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை கேட்டறியும் குகதாசன் எம்.பி

திருகோணமலை வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டுனம் கண்ணகி அம்மன் பாடசாலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை மக்கள் (17)அமோக வரவேற்பளித்தனர்.

குறித்த பகுதியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார். கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பிலும் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் மக்களிடம் இதன் போது தெரிவித்தார்.

இங்கு காணப்படும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது அதனை கருத்தில் கொண்டு தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்கி மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கி வருகிறோம்.

பிரதேச வைத்தியசாலையின் நலன் கருதி இரு வைத்தியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். 

இதில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

கஃபே அமைப்பின் ஊடக 18+ இளைஞர் வாக்காளர்களை அறிவூட்டுகின்ற வேலைத்திட்டம்

User1

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர் சடலமாக மீட்பு

User1

இலஞ்சம் பெறச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது !

User1

Leave a Comment