27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

இரத்தினபுரி நகரில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு பதுளை மஹியங்கனை பொலிஸில் நிதிக் குற்றங்கள் தொடர்பான பல வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி நகரில் உள்ள தங்கப் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு வந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கு நகையை பெற்றுக்கொண்டு ஐந்தாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் செல்லுபடியாகும் ஐந்தாயிரம் ரூபா தாள்களை கடைக்காரரிடம் கொடுத்த போது அவை போலி நாணயத்தாள்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பதுளை பிரதேசத்தை சேர்ந்த இவர் தனது வீட்டில் சில காலமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு மாணவி மரணம்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

sumi

நாளை வாக்குச்சீட்டுகள் விநியோகம் செய்யப்படாது-தபால் திணைக்களம் !

User1

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோ சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக சபைக்கு அறிவிப்பு

User1

Leave a Comment