29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாரதி! விசாரணையில் வெளியான காரணம்

பத்தரமுல்லை, அக்குரேகொட, அருப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று (18) இடம்பெற்றதாகவும் பணத் தகராறு காரணமாகவே குறித்த நபர் கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் அப்பகுதியில் உள்ள வாகன பளுதுபார்க்கும் நிலையம் ஒன்றுக்கு அருகில் கிடந்துள்ளது.

தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கொலை செய்த சந்தேகநபர் கொஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.   

Related posts

சிறுபோக நெல் கொள்வனவு – அமைச்சரவை அனுமதி !

User1

கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர் : விஜயகலா மகேஸ்வரன் !

User1

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் : ஜனாதிபதி ரணில் !

User1

Leave a Comment