29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் தடைசெய்யப்பட்ட வலை பறிமுதல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இராணுவத்துடன் இணைந்து பொலிசார் இன்று காலை 20.08.2024 திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

போதை பொருள் மற்றும் சட்டவிரோத உபகரணங்களை மறைத்துவைத்திருப்பதாக மருதங்கேணி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது

இந்த சுற்றிவளைப்பின் போது சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடிவலையான சுருக்குவலை ஒன்று பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சுருக்குவலை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாலஸ்தீன தூதுருக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் விசேட சந்திப்பு

User1

தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்க மாட்டோம்.!

sumi

இன்றைய நாணய மாற்று விகிதம் !

User1

Leave a Comment