29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: இருவர் மாயம்

பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலாப் படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தர பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ஆட்களை ஏற்றி சென்ற சுற்றுலாப் படகு ஒன்றும் பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகு ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகிலிருந்த இருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரவு நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதால் காணாமல் போனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

நடிகர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்னார் நாமல்

sumi

கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர் : விஜயகலா மகேஸ்வரன் !

User1

தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா

User1

Leave a Comment