27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் கோர விபத்து: விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி(Kilinochchi) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று குறித்த பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது வீதியால் சென்ற ஒருவர் திடீரென பேருந்தை வழிமறித்து ஏற முற்பட்ட போது பேருந்து சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்

இந்த விபத்தின் போது கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் விஜிதன் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியவசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முடங்கியது சுகாதார சேவை-பேச்சுவார்த்தை தோல்வி.!

sumi

மலையக மக்கள் ஈழத்தையோ ஆயுதங்களையோ ஒரு போதும் நேசிக்கவில்லை-அவர்கள் என்றும் இலங்கையர்களே..!

sumi

புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் போது சூரியன் உதிக்கும் திசையையும் கருத்திற்கொள்ள வேண்டும் ..!

sumi

Leave a Comment