27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பகுதியில் சடலம் ஒன்று மீட்பு

இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அருகில் இறந்த நிலையில் சடலம் ஒன்று மஸ்கெலியா பொலிஸார் மீட்டு உள்ளனர்.

இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண பட்டது என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

முகம் பார்க்க முடியாதபடி கழிவு நீர் செல்லும் வடிகாலில் விழுந்து இறந்து நிலையில் காணப்பட்ட சடலம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட கங்கேவத்தை பிரிவில் வசிக்கும் சேவி மாரி வயது 47 என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு ஹட்டன் வலய தடையகவியல் பொலிசார் வந்து பரிசோதனை மேற் கொண்டு வருகின்றனர்.

சடலம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வேலி போடப்பட்டு உள்ளது.


அப் பகுதிக்கு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி

User1

ஒரு வார காலத்துக்குள் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப உத்தரவு..!

sumi

மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு

User1

Leave a Comment