29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பன்றி தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் பன்றியின் தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 80 வயது வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவர் பன்றிகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வயோதிப பெண் தனது வீட்டுக்கு அருகில் நின்றிருந்த வேளை அயல் வீட்டில் வளர்த்த பன்றி அவரை தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மூதாட்டி நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

சர்வதேச அழகிப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற திலினி இலங்கைக்கு வருகை

User1

முல்லைத்தீவில் பாராட்டுப் பெறும் பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களின் செயற்பாடுகள்

User1

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்தவர் கைதானார்

sumi

Leave a Comment