27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் !

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை பொல்லு ஒன்றால் அடித்து கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

எப்பாவல பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த 66 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹட்டன் – நுவரெலியா பிரதானவீதியில் சொகுசு கார் விபத்து

User1

சரணடைந்த புலிகள் எங்கே? நீதிமன்றுக்கு போகும் இராணுவம்

sumi

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

User1

Leave a Comment