28 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

8 இந்திய மீனவர்கள் கைது 

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ் ஆண்டு இதுவரையான காலத்தில் 46 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 341 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த தந்தை-மீட்கப்பட்ட சடலங்கள்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!

sumi

யாழில் இலங்கை வங்கி உத்தியோகத்தரிற்கு நேர்ந்த பரிதாபம்

sumi

பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு

User1

Leave a Comment