27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொன்.சுகந்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

2024ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் உயர் விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்.சுகந்தன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு கோவையில் இயங்கும் சேரன்மாதேவி உலக சாதனை புத்தக நிறுவனம் உத்தியோகபூர்வமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் அவ் அறிவிப்பில் பொன்.சுகந்தன் அவர்களின் 50வது வயதிலேயே அவரின் வரலாறு பன்னிரண்டு புத்தகங்களாக அவரது பல்துறை சார்ந்த ஆளுமைகளின் வெளிப்பாடாக வெளிவருவதன் காரணமாகவே இவ் உயரிய விருது வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட உத்தியோகபூர்வமான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொன்.சுகந்தன் அவர்கள் பிரபல பேச்சாளர் மட்டுமன்றி எழுத்தாளர்,கவிஞர்,நாடகாசிரியர், பாடலாசிரியர்,நடிகர்,ஓவியர் எனப் பல்துறைகளிலும் பங்களிப்பாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

குளியாப்பிட்டிய எதுன்கஹகொடுவ முஸ்லீம் மத்திய கல்லூரியின் ஊடகப் பிரிவின் அங்குரார்ப்பண விழா

User1

37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்களுடன் மூவர் கைது

sumi

உழுவு இயந்திர விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு !

sumi

Leave a Comment