27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவாக ஏட்டிக்குபோட்டியாக வவுனியாவில் பலத்தை காட்டிய அரசியல்வாதிகள்!

ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏட்டிக்கு போட்டியாக இரண்டு பேரணிகள் (01.09) இடம்பெற்றிருந்தது.

அந்தவகையில், குருமன்காட்டில் இருந்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.கே. காதர் மஸ்தான் அவர்களின் ஆதரவாளர்கள் பேரணியாக ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தை சென்றடைந்திருந்தனர்.

சமநேரத்தில், வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான  கு. திலீபன் ஆதரவாளர்கள் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தை நோக்கி பேரணியாக சென்றடைந்தனர்.

இரு பேரணியிலும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பேரணியால் வவுனியா – மன்னார் வீதி மற்றும் நகரப் பகுதிகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்ப்பட்டிருந்தது.

Related posts

மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

User1

கற்பிட்டியில் பெண் கிராம உத்தியோகத்தரை வீடு புகுந்து நாசம் செய்ய முயற்சித்த கிராம உத்தியோகத்தர்..!

sumi

200 பஸ்கள் மீண்டும் சேவையில்!

sumi

Leave a Comment