27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலி: சாரதி தலைமறைவு

யக்கல – கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) கம்பஹாவில் இருந்து யக்கலை நோக்கி பயணித்த வான் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தையடுத்து வான் சாரதி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முச்சக்கரவண்டியில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு !

User1

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை

User1

அவுஸ்திரேலியா பயணமானார் ரணில்

sumi

Leave a Comment