27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

வெவ்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

கொழும்பு உள்ளிட்ட வெவ்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.   

அந்தவகையில், கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 11 கிராம் 830 மில்லிகிராம் ஹெரோயின், 75950 ரூபாய் பணம்,  கையடக்கத்தொலைபேசி ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (03) பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைதானவர் 32 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.  

இதேவேளை ,  பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிகஹவத்த பிரதேசத்தில் 11 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

நேற்று செவ்வாய்க்கிழமை (03)  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதானவர் 49 வயதான நெல்லிகஹவத்த பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  இரத்மலானை புகையிரத நிலைய பிரதேசத்திற்கு அருகில்  நேற்று செவ்வாய்க்கிழமை (03) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைதானவர்   43 வயதுடைய இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை , கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 09 கிராம் 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று செவ்வாய்க்கிழமை (03) பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் 32 வயதுடைய கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.  

Related posts

குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில்  இலங்கையின் துணை இராணுவக் குழுக்கள்!

User1

இரு சட்டமூலங்கள் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளன !

User1

நிமோனியாவால் மரணமடைந்த பெண் அபிவிருத்தி அதிகாரி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

User1

Leave a Comment