27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள உயர்வு: 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு !

உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அரச ஊழியர்களின் இந்த பாரிய சம்பள அதிகரிப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பான தரவுகள் அடுத்த மாதம் அச்சிடப்பட்டு வெளியிடப்படவுள்ள வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு ஆவணத்தில் காண முடியுமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எனவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசியல் வாக்குறுதி தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உடனடியாக வாபஸ் பெறுமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி ரணில் போட்டியிடும் சின்னத்தின் விபரம் வெளியானது

User1

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர் உயர்தர மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டமை குறித்து ஆர்ப்பாட்டம்

User1

பாதுகாப்பான இந்து சமுத்திரத்திற்காக ஒன்றிணைவோம்..!!

sumi

Leave a Comment