27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் வடமராட்சி கிழக்கில் தீவிரம்

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான பிரச்சார நடவடிக்கை வடமராட்சி கிழக்கிலும் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

  சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் இன்று 06.09.2024 இந்த பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்கள் இடையே பெருகிவருவதாக தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்தவருமாகிய ஆனந்தராசா சுரேஷ்குமார் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு பொது வேட்பாளருக்கு அமோக ஆதரவை வழங்கவேண்டுமெனவும் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டார்.

இதில் ஜனநாயக போராளிகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள்,  முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,தாளையடிகடற்தொழிலாளர் சங்க செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

அரச ஊழியர் சம்பளம் உயர்வு – IMF உடன்படிக்கைக்கு அமைவானது !

User1

கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர் : விஜயகலா மகேஸ்வரன் !

User1

ரகசிய தகவலில் நயினாதீவில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்..!

sumi

Leave a Comment