27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாகனங்களை அடித்து உடைத்து தீ வைத்து தப்பிச்சென்ற கும்பல் – பெண் காயம் !

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலொன்றினால் வேன் மற்றும் கார் சனிக்கிழமை (7) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதை பார்த்த வீட்டார் தீயினை அணைக்க முயன்றபோது, வாகனங்களின் உரிமையாளரினது தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

User1

கந்தளாய் சோழீசுவரம் சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பா.உ.ச.குகதாசன்

User1

பொலன்னறுவை கல் விகாரையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு !

User1

Leave a Comment