27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வுப்  பயிற்சி நெறி

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பயிற்சி நெறியானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (11.09.2024) நடைபெற்றது.

இப் பயிற்சி நெறியின் வளவளராக வடமராட்சி கிழக்கு பிரதேச  செயலாளர் திரு.கு.பிரபாகரமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். இவர் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பான விளக்கங்களை நடைமுறை உதாரணங்களூடாக தெளிவு படுத்தியிருந்ததுடன் இலஞ்ச மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டம் மற்றும் அவற்றிற்கு எதிரான  தண்டனைகள் தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தினை சேர்ந்த பதவி நிலை  உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து

sumi

இதுவரை 87 இலட்சம் வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிப்பு !

User1

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி !

User1

Leave a Comment