28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

செந்தமிழ் பிரீமியர் லீக் கிண்ணம் ஈஸ்டன் யுனைட்டட் வசம்

வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகம் நடத்திய செந்தமிழ் உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று  12.09.2024 மாலை உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது

செந்தமிழ் விளையாட்டு கழக தலைவர் தலைமையில் மாலை 4 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது

ஈஸ்டன் யுனைட்டட் அணியை எதிர்த்து செந்தளிர் F.c மோதியது.

ஆட்டத்தின் ஆரம்பமே போட்டி விறுவிறுப்பாக ஆரம்பமாக செந்தளிர் அணியினரால் முதல் கோல் போடப்பட்டது.சில நிமிடங்களிலையே பதிலுக்கு ஈஸ்டன் யுனைட்டட் அணியினராலும் ஒரு கோல் போடப்பட ஆட்டம் சூடு பிடித்தது 

இரண்டாவது கோலினை செந்தளிர் Fc செலுத்தி 2-1 என முன்னிலையில் இருந்த போது போட்டி முடிவின் சொற்ப நேரத்தில் ஈஸ்டன் யுனைட்டட் அணியால் மேலும் ஒரு கோல் போடப்பட்டு ஆட்டம் சமநிலையாக இறுதியில் போட்டியின் முடிவு தண்ட உதைக்கு மாற்றப்பட தண்ட உதையின் முடிவில் செந்தமிழின் 2024 ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட பிரிமீயர் லீக் கிண்ணத்தை ஈஸ்டன் யுனைட்டட் தனதாக்கி கொண்டது.

குறித்த இறுதி போட்டியில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசதலைவர்,கிராமசேவகர்,கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள்,அணியின் உரிமையாளர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மன்னார் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி மரணம்.

User1

ஜனாதிபதி தேர்தலுக்காக வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு வெளியான முக்கிய தகவல்

User1

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார்.

sumi

Leave a Comment