28 C
Jaffna
September 19, 2024
Uncategorized

பஸ்ஸில் கடத்திச் செல்லப்பட்ட தங்க புத்தர் சிலையுடன் நால்வர் கைது

குருணாகல் – கண்டி வீதியில் 4ஆவது மைல்கல் அருகில் பஸ் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட தங்க புத்தர் சிலையுடன்  நான்கு சந்தேக நபர்கள் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், முந்தல், வனாத்தவில்லு மற்றும் உடப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க புத்தர் சிலையின்  மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் இன்று வெள்ளிக்கிழமை (13) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீன்பிடி படகு கப்பலுடன் மோதி விபத்து- மூவரை காணவில்லை !

User1

சமூக ஊடகங்களில் அவதூறு – முதல் நபர் கைது.!

sumi

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

User1

Leave a Comment