28 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையில் இடம்பெற்ற இந்தியாவின் நொய்டா மைதானம்

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ஒரு பந்து வீச வீசப்படாத நிலையில் மோசமான சாதனை ஒன்றை படைத்தது. 

குறித்த டெஸ்ட் போட்டியானது உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ஆம் திகதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை சீக்கிரம் வெளியேற்ற முடியவில்லை.

இதனையடுத்து 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3-வது நாள் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1933 முதல் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை. இந்த போட்டி ரத்தான நிலையில், இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டம், இவ்வாறு ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது இது 8ஆவது முறையாகும். இதற்கு முன் கடைசியாக, 1998-இல் இவ்வாறு ஒரு பந்து கூட வீசப்படாமல் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கைவிடப்பட்டிருந்தன.

இதில் டுனெடினில் நடைபெற இருந்த இந்தியா – நியூஸிலாந்து ஆட்டம், மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட, ஃபைசாபாதில் பாகிஸ்தான் – சிம்பாப்வே அணிகள் மோதவிருந்த ஆட்டம் கடும் பனி காரணமாக நடைபெறாமல் போனது.

Related posts

சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்த அவுஸ்திரேலிய அரசு

User1

ஏவுகணை வீசி மீண்டும் சோதனை நடத்திய வடகொரியா

User1

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

sumi

Leave a Comment