28 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவராக ரந்தீர் சிங் போட்டியின்றி தெரிவு

ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆசிய ஒலிம்பிக் பேரவையின் 44-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு பிரதிநிதிகளுடன் இந்திய மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவும் கலந்து கொண்டார்.

இதன் போது சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான 77 வயதான ரந்தீர்சிங் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து பொறுப்பு தலைவராக செயற்பட்டு வந்த அவர் இப்போது முழுநேர தலைவராகி உள்ளார். இந்த தலைவர் பதவியை ஏற்கும் முதல் இந்தியர் ரந்தீர் தான். 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரான ரந்தீர்சிங் பஞ்சாப் மாநில பாட்டியாலாவைச் சேர்ந்தவர். ரந்தீர்சிங் தலைவராக 2028ஆம் ஆண்டு வரை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார்.

sumi

இலங்கையில் அதிகரித்துள்ள இணைய குற்றச்செயல்கள்: சீன உதவியை நாடியுள்ள அரசாங்கம்

User1

வரலாற்றுச் சாதனை படைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

User1

Leave a Comment