28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் புதிதாக நியமனம்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா வியாழக்கிழமை உடன் அமுலுக்கு வரும் வகையில், நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்நிலையில் மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவான் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

புல்மோட்டை பகுதியில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையிலையே நீதி சேவை ஆணைக்குழுவினால் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{16.2.2024}

sumi

பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

User1

மலைய மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சனைகள் தொடர்பான நூல் வெளியீட்டு விழா

User1

Leave a Comment