28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

வீதி விபத்தில் யுவதி பலி

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் மஹியங்கனை ரஜமகா விகாரைக்கு அருகில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறம் வேகமாக வந்த கார் மோதியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரிதிமாலியத்த 12, ஊரணிய பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ஹிமான்ஷி செவ்வந்தி (24) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு தேவையான பொருட்களைக் கொண்டு வருவதற்காக அவரது தந்தை தனது தாய் மற்றும் சகோதரியுடன் மஹியங்கனை நகருக்குச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 15 வயதுடைய சிறுமி பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பயணியிடம் மோசமான முறையில் செயற்பட்ட பேருந்து நடத்துனர் கைது

User1

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்!

User1

சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!!!

sumi

Leave a Comment