27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்தது நாசமானது

தெற்கு அதிவேக பாதையில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் குறித்த பேருந்து திடீரென தீப்பிடித்துள்ளதாக அதிவேக வீதி பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், பேருந்து தீப்பிடித்ததையடுத்து, பயணிகள் அனைவரும் அதிலிருந்து வெளியேறியதுடன், தீயினால் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீ விபத்தால் பேருந்து பலத்த சேதமடைந்தது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது

Related posts

சஜித்தைக் கொல்ல சதி!

sumi

உடுத்துறை பாரதி வி.க நடாத்தும் உதைபந்தாட்ட இறுதி போட்டி நாளை

User1

நாடு திரும்பினார் பாராலிம்பிக் சாதனை வீரர்

User1

Leave a Comment