27.9 C
Jaffna
September 20, 2024
யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில்.!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

சிறுகண் உடைய வலையை பயன்படுத்தி பல படகுகள் உதவியுடன் ஒளி பாய்ச்சி பல்லாயிரக்கணக்கான குஞ்சு மீன்களை பிடித்து அழிப்பதாகவும் இதனால் சிறுதொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்தவருடம் சுருக்குவலை தொழில் மேற்கொண்டோர் கைது செய்யப்பட்ட போதும் ஒரு சிலர் இன்றும் சுதந்திரமாக சட்டவிரோத சுருக்குவலை தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகள் கடலில் ஒளிபாய்ச்சி சுருக்குவலை மூலம் ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான மீன்களை பிடித்து அழித்தால் தாம் வாழ்வதற்கு என்ன செய்வது என்றும்
இது தொடர்பாக மீன்பிடி அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டவிரோத சுருக்குவலை தொழிலை தடுத்து நிறுத்தி சிறு தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
IMG 20240202 194649

Related posts

தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க நடவடிக்கை.!

sumi

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

User1

சென்.பிலிப்நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா

User1

Leave a Comment