27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedயாழ் செய்திகள்

நகைத் திருட்டு – இருவர் கைது.!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில்
நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளுக்கமைய இருவரும் நெல்லியடி பகுதியில் நேற்று(02) கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
IMG 20240203 WA0014
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் கடந்த வருடத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாகவே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
IMG 20240203 WA0013

Related posts

ஊடகவியாளர்களுக்கான மனித உரிமைசார் செயலமர்வு

User1

கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு !

User1

யாழில் ஊசி மூலம் அதிகளவு போதைப்பொருள் பாவனை : இளைஞன் பலி

sumi

Leave a Comment