27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார இந்தியாவுக்கு இன்று பயணம்

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் செல்கின்றனர். ‘எட்கா’ உடன்படிக்கையை நிறைவேற்ற மீண்டும் தயாராகிவரும் நிலையில், அதற்கு ஆதரவு கேட்கவே அநுரகுமாரவை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்தியாவிற்குச் செல்கின்றனர்.

Related posts

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவர் கைது!

User1

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கிழக்கு முனைய அபிவிருத்திக்கான இயந்திரங்கள்.!

sumi

தீயில் எரிந்த கொஸ்லந்த வனம்

User1

Leave a Comment