27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

எத்தியோப்பியப் பெண் கண்டியில் கைது

இலங்கையில் ஆணொருவரைத் திருமணம் செய்து கொண்டு விசா இன்றி தந்தையுடன் தங்கியிருந்த எத்தியோப்பிய பெண், கண்டி சுற்றுலாத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பதாகவும், வெளிநாட்டு பெண், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்சிய இலங்கையை சேர்ந்த கணவர் பெண்ணின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எத்தியோப்பிய பெண் தனது முந்தைய திருமணத்தின்போது தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டிற்கு வந்துள்ளார், மேலும் அவரது விசா ஜனவரி 17 ஆம் திகதி காலாவதியானது, சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பொலிஸ் பிரிவு இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதரகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

மஹரகமவில் தீ விபத்து.!

sumi

காதலர் தினத்தில் கணவனுடன் சேர்ந்து முன்னாள் காதலனின் காலை உடைத்த காதலி-இலங்கையில் சம்பவம்..!

sumi

தேர்தலைப் பிற்போடுவதை ஏற்க முடியாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்.!

sumi