27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்-3பிள்ளையின் இளம் தந்தை விபரீத முடிவு..!{படங்கள்}

கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று(16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர்.

அப் பகுதி மக்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1708077588 WhatsApp Image 2024 02 16 at 3.27.15 PM (2)~2 Polish 20240216 162829786

Related posts

டெங்கு பரவும் சூழல். நீதிமன்றால் 07 பேருக்குத் தண்டம்…!

sumi

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

sumi

கண்டி நகர எல்லைக்குள் 11 நாட்கள் இறைச்சி மதுபான கடைகள் பூட்டு : வெளியான அறிவிப்பு

User1