27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் – தேடுதல் நடவடிக்கை இருளால் இடைநிறுத்தம்..!

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை முடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்று விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை சம்பவத்தை கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் இயந்திர படகுகளை கொண்டு தேடியும் இன்று இரவு 09.00 மணி வரை அந்த மாணவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் இருள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய ஆறு மாணவர்களும் அவர்கள் பயணித்த துவிச்சக்கர வண்டிகளும் நிந்தவூர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மக்களை ஏமாற்றுவதை கைவிடுங்கள் ; சமஸ்டிக் கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா – சபா குகதாஸ் சவால்

User1

ஜனாதிபதி தேர்தலில் 2 நாமல் ராஜபக்சக்கள் போட்டி! கட்டுப்பணம் செலுத்திய விக்ரமசிங்க

User1

தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியை அவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக சந்தித்தனர்.

User1