29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நாளை  06.08.2024  இடம் பெறவுள்ளது.

செம்பியன்பற்று அ.த.க பாடசாலை அதிபர் சு.கணேஸ்வரன் தலைமையில் நாளை காலை குறித்த சைக்கிள் பேரணி ஆரம்பமாகும்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்குமாகாணத்தின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும்,கூட்டுறவு ஆணையாளருமாகிய ந.திருலிங்கநாதன் கலந்து கொள்கிறார்.

அத்தோடு சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் வசிக்கும் அனுசரணையாளரும்,பழைய மாணவனுமாகிய க.இராஜரட்ணம் அவர்கள் கலந்து கொள்கிறார்.

மாமுனை,செம்பியன்பற்று,மருதங்கேணி தாளையடி வீதியூடாக குறித்த பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

22 கைதிகள் – நாளை விடுதலை..!

sumi

நேற்றைய சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. – அமைச்சர் டக்ளஸ்.!

sumi

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை நிகழ்வு

User1

Leave a Comment